சாலை விபத்தில் முதியவர் சாவு


சாலை விபத்தில் முதியவர் சாவு
x

சாலை விபத்தில் முதியவர் பலியானார்.

ராணிப்பேட்டை

சாலை விபத்தில் முதியவர் பலியானார்.

பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல்மொணவூர் அருகே சம்பவத்தன்று 60 வயது மதிக்கத்தக்க நபர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story