மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்த முதியவர்?


மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்த முதியவர்?
x

மருத்துவமனை வளாகத்தில் இறந்து கிடந்த முதியவர்? யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்

குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக சம்பவத்தன்று வந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மருத்துவமனை வளாகத்திலேயே இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வைகைநல்லூர் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, அந்த முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story