குறிஞ்சிப்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி யார் அவர்? போலீசார் விசாரணை


குறிஞ்சிப்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி யார் அவர்? போலீசார் விசாரணை
x

குறிஞ்சிப்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு முதியவர் உயிாிழந்தாா். அவா் யாா்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

குறிஞ்சிப்பாடி அருகே கிழ்பூவாணிகுப்பம் கிராம பகுதியில் செல்லும் கடலூர்-விருத்தாசலம் ரெயில் தண்டவாளத்தில் நேற்று காலை அடையாளம் தெரியாத 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதைபாா்த்து அதிர்ச்சியடைந்த அக்கிராம மக்கள் இதுபற்றி கடலூர் முதுநகர் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, முதியவரின் உடலை கைப்பற்றி அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் கடலூரில் இருந்து திருச்சி நோக்கி காலையில் சென்ற பயணிகள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து முதியவர் உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெயிலில் அடிபட்டு இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story