கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் உயிரிழந்தாா்.
ராமநத்தம்,
வேப்பூர் அடுத்த அரியநாச்சியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் செல்வராஜ் (வயது 65). இவர் மொபட்டில் தொண்டங்குறிச்சி அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





