கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி
சரவணம்பட்டி
கோவை பச்சாபாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜன் (வயது73). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது இருசக்கர வாகனத்தில் சூலூரில் உள்ள தனது தம்பி வீட்டிற்கு சென்றபேது, கள்ளிப்பாளையம் அருகே கார் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





