கார் மோதி முதியவர் பலி


கார் மோதி முதியவர் பலி
x

கார் மோதி முதியவர் பலியானார்.

திருச்சி

வளநாட்டை அடுத்த கார்வாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாவி (வயது 70) இவர் நேற்று காரணிபட்டி பிரிவு சாலை அருகே மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் அண்ணாவி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story