சாலை விபத்தில் முதியவர் பலி; பொதுமக்கள் மறியல்


சாலை விபத்தில் முதியவர் பலி; பொதுமக்கள்  மறியல்
x

சாலை விபத்தில் முதியவர் பலியானார். பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்

அரியலூர் அருகே அமினாபாத் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி(வயது 80). இவர் காலையில் டிபன் சாப்பிட கடைக்கு செல்ல சாலையின் ஓரமாக நடந்து சென்றபோது, அரியலூரில் இருந்து பெரியாகுறிச்சிக்கு சென்ற மினி லாரி சுப்ரமணி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுப்ரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து தப்பி ஓடிய மினி லாரி டிரைவர் துரை என்பவரை கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த நிலையில் இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளை தடுக்க வேண்டும். மேலும் தடை செய்யப்பட்ட நேரத்தில் லாரிகள் இயக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அரியலூர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story