ரெயில் மோதி முதியவர் பலி


ரெயில் மோதி முதியவர் பலி
x

அரக்கோணம் அருகே ரெயில் மோதி முதியவர் பலியானார்.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தை அடுத்த மோசூர் ரெயில் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் (வயது 73) என்பவர் தண்டவாளத்தை கடந்த போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற புறநகர் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story