பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 4 May 2023 6:45 PM GMT (Updated: 4 May 2023 6:45 PM GMT)

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஜாக்டோ ஜியோ மாநில நிர்வாகி வலியுறுத்தினார்.

ராமநாதபுரம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர், மாநில ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வருகிற 21-ந்தேதி ஐம்பெரும் விழா நடக்க உள்ளது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் கலந்து கொள்ள உள்ளனர். விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவாக அரசு பள்ளி மாணவர்களுக்கு 53 ஆயிரம் பேனா, சிறந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இளஞ்சூரியன் விருது, சிறந்த ஆசிரியர்கள், சங்கத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம். அவர் நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் கோர்ட்டு உத்தரவு காரணமாக பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிப்படைந்து உள்ளனர். இவ்வாறு கூறினார். இதை தொடர்ந்து ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில், சங்க மாவட்ட தலைவர், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் முருகேசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story