ரிஷிவந்தியம் அருகேபெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த மூதாட்டி கைது


ரிஷிவந்தியம் அருகேபெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த மூதாட்டி கைது
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 12 Feb 2023 6:45 PM GMT)

ரிஷிவந்தியம் அருகே பெட்டிக்கடையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மூதாட்டி கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்,

பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் ரிஷிவந்தியம் அடுத்த இளையனார்குப்பம் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பெட்டிக்கடையில் பதுக்கி விற்ற, அதேஊரை சேர்ந்த நாட்டான் மனைவி கண்ணம்மாள் (வயது 70) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் பெட்டிக்கடையில் வைக்கப்பட்டிருந்த 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story