மூதாட்டி தீக்குளித்து தற்கொலை


மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
x

மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்

திருநெல்வேலி

பேட்டை:

சுத்தமல்லி இந்திரா நகர் 6-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் மாணிக்கவாசகம். ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி தாயம்மாள் (வயது 65). ேநற்று முன்தினம் தாயம்மாள் வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று தாயம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story