கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

கடையநல்லூரில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் அருகே விஷால் நகரை சேர்ந்தவர் கந்தையா மனைவி பாப்பம்மாள் (வயது 74). மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்று அருகில் உள்ள கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





