மூதாட்டி சாவு


மூதாட்டி சாவு
x

வேளாங்கண்ணி அருகே டிராக்டர் ேமாதி மூதாட்டி இறந்தார்.

நாகப்பட்டினம்

கோவா மாநிலத்தை சேர்ந்த பிலிப்பினா கர்வாலே (வயது 68). நேற்றுமுன்தினம் இவர் தனது உறவினர்களுடன் வேளாங்கண்ணிக்கு ஆன்மிக சுற்றுலா வந்தார். அப்போது தனியார் விடுதியில் தங்கி இருந்த இவர் கொங்கனி மொழி பூஜையில் கலந்துெகாள்வதற்காக வேளாங்கண்ணி கடற்கரை சாலையில் இருந்து பேராலயம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பி்ன்னால் வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது ேமாதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் மூதாட்டியின் தலை சிக்கி நசுங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிலிப்பினா கர்வாலே உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பிவைத்தனர்.


Next Story