கதண்டுகள் கடித்து மூதாட்டி சாவு


கதண்டுகள் கடித்து மூதாட்டி சாவு
x

மணல்மேடு அருகே கதண்டுகள் கடித்து மூதாட்டி உயிரிழந்தார்.

மயிலாடுதுறை

மணல்மேடு;

மணல்மேடு அருகே கதண்டுகள் கடித்து மூதாட்டி உயிரிழந்தார்.

கதண்டுகள் கடித்தது

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே அகர மணல்மேடு காலனி தெருவை சேர்ந்த ராஜாங்கம். இவருடைய மனைவி பட்டுபாங்கி (வயது70). சம்பவத்தன்று இவர், மணல்மேடு- வக்காரமாரி செல்லும் சாலையில் உள்ள ஒரு வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு பனை மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் பட்டுபாங்கியை கடித்தது.

பரிதாப சாவு

இதில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மணல்மேடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பட்டுபாங்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story