விபத்தில் மூதாட்டி சாவு

விபத்தில் மூதாட்டி இறந்தார்.
புதுக்கோட்டை இலுப்பூர் மேலசித்தகுடிபட்டி பகுதியை சோ்ந்தவர் இளஞ்சியம்(வயது 69). இவர் சம்பவத்தன்று மதுரை-சென்னை சாலையில் பஞ்சப்பூர் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இளஞ்சியம் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இளஞ்சியம் நேற்று முன்தினம் இரவு இறந்துவிட்டார். இதுகுறித்து கண்டோன்மெண்ட் போக்குவரத்து தெற்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





