மோட்டார்சைக்கிள் விபத்தில் மூதாட்டி பலி


மோட்டார்சைக்கிள் விபத்தில் மூதாட்டி பலி
x

மோட்டார்சைக்கிள் விபத்தில் மூதாட்டி பலியானார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

மோட்டார்சைக்கிள் விபத்தில் மூதாட்டி பலியானார்.

ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் அமராவதி (வயது 65). இவர் மண்டலவாடி பகுதியில் உள்ள சிவன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் சாமி கும்பிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

மண்டலவாடி கூட்ரோடு அருகே திருப்பத்தூர் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த படுகாயம் அடைந்த அமராவதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி அமராவதி இறந்து விட்டார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமானவராக கூறப்படும் ராஜா என்பவரின் மகன் மருதுபாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story