பாம்பு கடித்து மூதாட்டி சாவு

பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழந்தார்.
வி.கைகாட்டி:
அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் காலனி தெருவை சேர்ந்த அழகுமுத்துவின் மனைவி பெரியம்மாள்(வயது 60). இவர் கடந்த 5-ந் தேதி வீட்டின் பின்புறம் நின்று கொண்டிருந்தபோது, அவரை பாம்பு கடித்தது. இதையடுத்து பெரியம்மாளை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





