தீயில் கருகி மூதாட்டி பலி


தீயில் கருகி மூதாட்டி பலி
x

பரமத்திவேலூர் அருகே தீயில் கருகி மூதாட்டி இறந்தார்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் நல்லம்மாள் (வயது 65). இவர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள தங்காயி அம்மன் கோவிலுக்கு சென்று சாமிக்கு விளக்கு ஏற்றி உள்ளார். பின்னர் அவர் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு அருகில் எரிந்து கொண்டிருந்த விளக்கு நல்லம்மாள் அணிந்திருந்த சேலையில் பட்டு திடீரென தீப்பிடித்து மளமளவென உடல் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து சேலையில் பிடித்த தீயை அணைத்தனர். இருப்பினும் சேலையில் தீப்பிடித்து எரிந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல்லில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று நல்லம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story