சிவசேனா கட்சி சார்பில் ஆ.ராசா எம்.பி. உருவபொம்மையை எரிக்க முயற்சி


சிவசேனா கட்சி சார்பில்  ஆ.ராசா எம்.பி. உருவபொம்மையை எரிக்க முயற்சி
x
தினத்தந்தி 16 Sep 2022 6:45 PM GMT (Updated: 16 Sep 2022 6:46 PM GMT)

தேனியில் சிவசேனா கட்சியினர் ஆர்.ராசா எம்.பி. உருவபொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

தேனி

சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குருஅய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் சிலர் தேனி பழைய பஸ் நிலையம் முன்பு இருந்து நேரு சிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அப்போது அவர்கள் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா இந்து மதத்தையும், இந்து மக்களையும் இழிவுப்படுத்தி பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் அவர்கள் ஆ.ராசா உருவபொம்மையை தூக்கி வந்தனர். அந்த உருவபொம்மையை எரிக்க முயன்ற அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் இருந்து உருவபொம்மையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் ஆ.ராசாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story