திண்டுக்கல் லியோனி மீதுஅ.தி.மு.க.வினர் போலீசில் புகார்


திண்டுக்கல் லியோனி மீதுஅ.தி.மு.க.வினர் போலீசில் புகார்
x
தினத்தந்தி 30 Aug 2023 6:45 PM GMT (Updated: 30 Aug 2023 6:45 PM GMT)

திண்டுக்கல் லியோனி மீது அ.தி.மு.க.வினர் போலீசில் புகார் செய்தனர்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை அ.தி.மு.க. நகர செயலாளர் ராமநாதன் மற்றும் நிர்வாகிகள் திருவாடானை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதற்கு அவர் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.


Next Story