கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுதேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

ராணிப்பேட்டை

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கிறிஸ்துமஸ்

இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை (இன்று) ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.

மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு தேவாலயங்களில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனை நடந்தது.

பலர் புத்தாடைகள் அணிந்து தேவாலயங்களுக்கு சென்றிருந்தனர். மேலும் பலர் தங்கள் வீடுகளில் குடில்கள் அமைத்து, வண்ண ஸ்டார்களை தொங்கவிட்டிருந்தனர். பேக்கரி கடைகளில் கேக் விற்பனை அமோகமாக இருந்தது. வேலூர் மாநகரில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

குழந்தை ஏசு சொரூபம்

விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. ஏசு பிறந்ததை குறிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை ஏசு சொரூபத்தை ஆயர் காட்டினார்.

பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள குடிலில் சொரூபம் வைக்கப்பட்டது. இதில் ஆயர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். சார்பனாமேட்டில் உள்ள ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

சி.எஸ்.ஐ. மத்திய ஆலயம்

சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயத்தில் வேலூர்பிஷப் சர்மாநித்தியானந்தம் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆலய வளாகத்தில் குழந்தைகள் பலர் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சீயோன் பெந்தெகொஸ்தே சபையிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது.

இதேபோல மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பல தேவாலயங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெவ்வேறு நேரங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது.


Next Story