விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு
x

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோயம்பேடு சந்தையில் மல்லிகை கிலோ ரூ. 800-க்கும், முல்லை கிலோ ரூ. 500-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 150-க்கும், ரோஜா கிலோ ரூ. 160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வால் பொதுமக்கள் குறைவாக பூக்களை வாங்கி செல்கின்றனர். இந்த விலை உயர்வு இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story