பிரதோஷத்தையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு


பிரதோஷத்தையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 20 March 2023 12:15 AM IST (Updated: 20 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பிரதோஷத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

தேனி

பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பகுதியில் உள்ள கைலாசநாதர் மலைக் கோவிலில் பங்குனி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கைலாசநாதர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், பெரியகுளம் அருகே ஈச்சமலை பகுதியில் உள்ள மகாலட்சுமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனையொட்டி சிவனுக்கு பச்சை துண்டு அணிவித்து, நந்திகேஸ்வரர், மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. இதில் பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். போடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ கொண்டரங்கி மல்லையப்ப சுவாமி கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் சிவ பெருமான் சுரைக்காய்களால் ஆன சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

1 More update

Related Tags :
Next Story