வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டுவிழுப்புரம் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்கலெக்டர் மோகன் உத்தரவு


வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டுவிழுப்புரம் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்கலெக்டர் மோகன் உத்தரவு
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் நாளை மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளாா்.

விழுப்புரம்

தமிழ்நாடு மதுபான சில்லறை வணிக விதிகள் மற்றும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு வடலூர் ராமலிங்கர் நினைவு நாளன்று அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி வடலூர் ராமலிங்கர் நினைவு நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள், தனியார் மதுபான கூடங்கள் ஆகிய அனைத்தும் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார். எனவே நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும், மதுபான கூடங்களும் இயங்காது என தெரிவிக்கப்படுகிறது.

1 More update

Next Story