வாலிபர் தற்கொலை வழக்கில் ஒருவர் கைது


வாலிபர் தற்கொலை வழக்கில் ஒருவர் கைது
x

வாலிபர் தற்கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே மயிலாடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ் என்கிற மதியழகன். இவர், அரசடிப்பட்டி 4 ரோட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் யுவராஜ் (வயது 23). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பத்தன்று இரவு யுவராஜ் கூழையன்காடு கிராமத்திற்கு சென்ற போது அதே ஊரை சேர்ந்த சிலர் யுவராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த யுவராஜ் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில், யுவராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குடி போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் யுவராஜை தாக்கிய கூழையன்காட்டை சேர்ந்த துரைக்கண்ணு மகன் கோபாலகிருஷ்ணன் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story