ஆடு மேய்க்கும் தகராறில் ஒருவர் கைது


ஆடு மேய்க்கும் தகராறில் ஒருவர் கைது
x

முக்கூடல் அருகே ஆடு மேய்க்கும் தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

முக்கூடல்:

முக்கூடல் அருகே உள்ள ஓ.துலுக்கபட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 52). இவருக்கும், உடையாம்புளியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் (52) என்பவருக்கும் ஆடு மேய்ப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சிவசுப்பிரமணியன், தங்கராஜை கம்பால் தாக்கினார். இதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசுப்பிரமணியனை கைது செய்தனர்.

1 More update

Next Story