தபால் நிலைய ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்


தபால் நிலைய ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் நிலைய ஊழியர்கள் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்


தபால் துறையினை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், திட்டமிட்டபடி பென்ஷன் வழங்குவதற்கு உத்தரவாதம் தர வேண்டும், கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தலைமை தபால் நிலைய ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக தபால் அலுவலகம் முன்பு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் தபால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. தலைமை தபால் நிலையத்தில் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டதால் தபால் சேவை பாதிக்கப்பட்டது.


Next Story