தூக்குப்போட்டு ஒருவர் சாவு

நெல்லை அருகே தூக்குப்போட்டு ஒருவர் இறந்தார்.
மானூர்:
நெல்லை அருகே உத்தமபாண்டியகுளம்- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுடலை மாடசாமி கோவில் அருகே உள்ள வேப்பமரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்ததும் நெல்லை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. சப்-இன்ஸ்பெக்டர் நிசார் அகமது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





