மினிவேன் மீது மோட்டார்சைக்கிள் மோதி ஒருவர் பலி


மினிவேன் மீது மோட்டார்சைக்கிள் மோதி ஒருவர் பலி
x

வந்தவாசி அருகே மினிவேன் மீது மோட்டார்சைக்கிள் மோதி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியை அடுத்த சேதராகுப்பம் மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி (வயது 45), இவர் சம்பவத்தன்று மோட்டார்சைக்கிளில் ஓசூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

ஓசூர் சாலை மழங்கரணை அருகில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற மினிவேன் மீது மோட்டார்சைக்கிள் மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த வீரமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து வீரமணியின் மகன் பிரபாகரன் (22) கீழ்கொடுங்காலூர் ேபாலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story