வேப்பூரில் வாகனம் மோதி ஒருவர் பலி


வேப்பூரில் வாகனம் மோதி ஒருவர் பலி
x
தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:45 PM GMT)

வேப்பூரில் வாகனம் மோதி ஒருவர் உயிாிழந்தாா்.

கடலூர்

ராமநத்தம்,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி இந்திரா நகரை சேர்ந்தவர் தோமஸ் மகன் பாபு (வயது 45). இவர் தனது நண்பரான அதே ஊரை சேர்ந்த சத்தியநாதன் மகன் மனோகரன் (42) என்பவருடன் ஒரு காரில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வந்தார். பின்னர் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகே காரை நிறுத்திவிட்டு விருத்தாசலம் சாலையில் உள்ள கோவிலுக்கு நடந்து சென்றனர். ஏ.சித்தூர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பாபு மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாபுவை பரிசோதித்த டாக்டா்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story