ரெயில் மோதி ஒருவர் பலி


ரெயில் மோதி ஒருவர் பலி
x

அரக்கோணம் பகுதியில் ரெயில் மோதி ஒருவர் பலியானார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட திருத்தணி திரவுபதி அம்மன் கோவில் அருகே அவ்வழியாக வந்த ரெயில் மோதியதில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் இறந்து கிடந்தார். சப்- இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் செனறு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேபோன்று திருத்தணி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் சென்று அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிக்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story