வாலாஜா அருகே ரெயில் மோதி ஒருவர் பலி


வாலாஜா அருகே ரெயில் மோதி ஒருவர் பலி
x

வாலாஜா அருகே ரெயில் மோதி ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

வாலாஜா

அசாம் மாநிலம் பாட்னாவில் இருந்து பெங்களூரு வரை இயக்கப்படும் பாடலிபுத்ரா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே வந்துகொண்டிருந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்றவர் மீது ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story