சரக்கு வாகனம் மோதி வாலிபர் சாவு


சரக்கு வாகனம் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 20 Aug 2023 12:15 AM IST (Updated: 20 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சரக்கு வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி


வாணாபுரம்,

வாணாபுரம் அடுத்த ராயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூகாஸ் மகன் வினிஷ்குமார் (வயது 20). இவர் தனது மோட்டார் சைக்கிளில் மூரார்பாளையத்திலிருந்து பழையசிறுவங்கூர் வழியாக தனது கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

பழையசிறுவங்கூர் அருகே சென்ற போது, தியாகதுருகத்தில் இருந்து சங்கராபுரம் நோக்கி வந்த சரக்கு வாகனம் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வினிஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, விக்னேஷ் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story