வாகனம் மோதி ஒருவர் பலி


வாகனம் மோதி ஒருவர் பலி
x

கணியம்பாடி அருகே வாகனம் மோதி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

வேலூர்

அடுக்கம்பாறை

கணியம்பாடியை அடுத்த கன்னிகோவில் பகுதியில் 50 வயது மதிக்கத்தக்கவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த வல்லம் கிராம நிர்வாக அலுவலர் ராம்ராஜ், வேலூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் சென்று இறந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

அது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story