ஒரு மாத பச்சிளம் குழந்தை மர்ம சாவு


ஒரு மாத பச்சிளம் குழந்தை மர்ம சாவு
x
தினத்தந்தி 19 Sept 2023 2:15 AM IST (Updated: 19 Sept 2023 2:15 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே ஒரு மாத பச்சிளம் குழந்தை மர்மமான முறையில் இறந்தது.

கோயம்புத்தூர்


கோவை


கோவை சின்னியம்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் பாலாமணி (வயது 20). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முனீஸ்வரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கடந்த மாதம் பாலாமணிக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.


இதனால் முனீஸ்வரன் சொந்த ஊரான சிவகாசிக்கு சென்று விட்டார். மனைவி சின்னியம்பாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பாலாமணி தனது ஒருமாத குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்தார்.


சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது, குழந்தை அசைவற்ற நிலையில் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பாலாமணி குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தை மர்மமான முறையில் இறந்தது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


1 More update

Next Story