மேலும் ஒருவர் கைது


மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 20 Sep 2022 6:45 PM GMT (Updated: 20 Sep 2022 6:46 PM GMT)

பாஞ்சாகுளம் சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாகுளம். இந்த கிராமத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் அங்குள்ள ஒரு கடையில் தின்பண்டங்கள் வாங்க சென்ற மாணவர்களுக்கு பொருட்கள் வழங்க மறுத்ததாக அந்த கடைக்கு அதிகாரிகள் `சீல'் வைத்தனர்.

கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளரும், ஊர் நாட்டாண்மை என கூறப்படும் மகேஸ்வரன் மற்றும் ராமச்சந்திரமூர்த்தி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். குமார், சுதா, முருகன் ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் கோவையில் இருந்த துணை நாட்டாண்மையான குமார் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். சுதா, முருகன் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.



Next Story