இடப்பிரச்சினை தகராறில் மேலும் ஒருவர் கைது

நெல்லையில் இடப்பிரச்சினை தகராறில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி (வயது 47) என்பவரை இடப்பிரச்சினை தகராறு காரணமாக முத்துராமலிங்கம் (55) மற்றும் மந்திரமூர்த்தி (33) ஆகிய இருவரும் சேர்ந்து தகாத வார்த்தையால் பேசி, இரும்பு கம்பியை காட்டி மிரட்டி உள்ளனர்.
இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மந்திரமூர்த்தி என்பவரை கைது செய்தனர். இந்தநிலையில் முத்துராமலிங்கத்தையும் போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





