செல்போன் கடை ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


செல்போன் கடை ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

செல்போன் கடை ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த செல்போன் கடை ஊழியர் வினோத்தை கொலை செய்த வழக்கில் ஏற்கனவே 18 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அதில் பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு முத்து நகரை சேர்ந்த வீராசாமியின் மகன் பப்லு என்ற சத்தியமூர்த்தியை (வயது 24) நேற்று போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story