செல்போன் கடை ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


செல்போன் கடை ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x

செல்போன் கடை ஊழியர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த செல்போன் கடை ஊழியர் வினோத்தை கொலை செய்த வழக்கில் ஏற்கனவே 6 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அதில் பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு காந்தி நகரை சேர்ந்த ராமர் மகன் நவீன்குமாரை (வயது 23) நேற்று போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story