டாக்டர் வீட்டில் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது


டாக்டர் வீட்டில் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:47 PM GMT)

வாசுதேவநல்லூரில் நடந்த டாக்டர் வீட்டில் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் புதுமனை 3-ம் தெருவில் வசிப்பவர் மணிவண்ணன். ஓமியோபதி டாக்டர் ஆன இவர் வாசுதேவநல்லூரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த மாதம் 102 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது. இதுகுறித்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்தார்.

கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி தருமபுரி மாவட்டம் அரூர் தாலுகா மலைதாங்கி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 50), அவருடைய மனைவி லலிதா (45), மகன் நவீன்குமார் (27) ஆகிய மூவரை கைது செய்து அவர்களிடம் இருந்து 20 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

மேலும் இதில் தொடர்புடைய சேலம் மாவட்டம் தும்பல் ஆசாரி தெருவைச் சேர்ந்த கோவிந்தன் மகன் மணிகண்டன் (48) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் வேலுப்பாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 18 பவுன் நகைகளை மீட்டனர்.


Next Story