வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது


வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது
x

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது

திருப்பூர்

பொங்கலூர்,

பொங்கலூரை அடுத்த கொடுவாய் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம். பேக்கரி வைத்துள்ளார். இவர் கடந்த 23-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திண்டுக்கல் சென்று விட்டார். பின்னர் மறுநாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் வைத்திருந்த ரூ.4 லட்சம், 2¼ பவுன் நகை ஆகியவற்றை மர்ம ஆசாமி திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து அவினாசிபாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பெருந்தொழுவு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் திருப்பூர் காலேஜ் ரோட்டை சேர்ந்த அப்பாஸ் என்பவரது மகன் ஜினசீர் (20) என்பதும், ஜீவானந்தம் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story