டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை


டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை
x

டிப்பர் லாரி மோதி விவசாயி பலி: டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை கடலூர் கோர்ட்டு தீர்ப்பு

கடலூர்

கடலூர்

நெல்லிக்குப்பம் அருகே வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). விவசாயி. இவர் கடந்த 21. 10. 2016 அன்று மாலை பண்ருட்டி - கடலூர் மெயின்ரோடான வாழப்பட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் கடலூர் நோக்கி வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றி நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான பண்ருட்டி சின்ன பகண்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் ராஜேஷ் (28) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி வனஜா தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் ராஜேஷ் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கவுதமன் ஆஜராகி வாதாடினார்.


Next Story