ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.82 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு


ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.82 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 25 May 2023 6:45 PM GMT (Updated: 25 May 2023 6:46 PM GMT)

ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.82 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிவகங்கை

காரைக்குடியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 25). கடந்தாண்டு இவருடைய செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் உள்ள விவரங்களை ஒரு செயலியில் பதிவேற்றம் செய்து அவர்கள் கொடுக்கும் பொருட்களை பெற்றுக் கொடுத்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை நம்பி ராமமூர்த்தி 16 தவணைகளில் ரூ.82 ஆயிரத்து 400-ஐ முதலீடு செய்து உள்ளார். அதன் பின்னர் அவர்கள் ராமமூர்த்தியுடன் தொடர்பை துண்டித்து விட்டனர். அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமமூர்த்தி சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தேவி ஆகியோர் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பணத்தை மீட்டனர். மீட்கப்பட்ட பணத்தை ராமமூர்த்தியிடம் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஒப்படைத்தார்.


Next Story