ரூ.6 லட்சத்தில் புதிய நாடக மேடை திறப்பு
சேர்வைகாரன்பட்டியில் ரூ.6 லட்சத்தில் புதிய நாடக மேடை திறக்கப்பட்டது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிழவயல் ஊராட்சியில் சேர்வைகாரன்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நாடக மேடை இல்லாததால் அதை அமைத்து தர வேண்டும் என மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரனிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அவர் மாவட்ட ஊராட்சி குழு நிதியில் இருந்து ரூ.6.15 லட்சத்தை ஒதுக்கீடு செய்தார். இதை தொடர்ந்து சேர்வைக்காரன்பட்டி கிராமத்தில் நாடக மேடை கட்டுமான பணி நடந்தது. பணி முடிந்ததையொட்டி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கரன் ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம், கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்பையா, ஒன்றிய அவை தலைவர் ராதாகிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய துணை செயலாளர்கள் வி.எம்.பில்டர்ஸ் வெள்ளைச்சாமி, வீரமணி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், சேர்வைக்காரன்பட்டி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.