மூளைச்சாவு அடைந்த மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம்


மூளைச்சாவு அடைந்த மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம்
x

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மூதாட்டியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பெரியார் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி. அவரது மனைவி கஸ்தூரி (வயது 70). இவர், கடந்த 2-ந்தேதி மளிகை பொருட்கள் வாங்க கடைவீதிக்கு சென்றார். அப்போது அவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக வேட்டவலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

பின்னர் கஸ்தூரியின் இதயம், சிறுநீரகம் ஆகியவற்றை மருத்துவமனைக்கு தானம் செய்தனர். இதுதொடர்பாக வேட்டவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story