விஜயகரிசல்குளம் அகழாய்வில் கிடைத்த ஆபரணம்-பாசிமணிகள்


விஜயகரிசல்குளம் அகழாய்வில் கிடைத்த ஆபரணம்-பாசிமணிகள்
x

விஜயகரிசல்குளம் அகழாய்வில் ஆபரணம், பாசிமணிகள் கிடைத்தன.

விருதுநகர்

தாயில்பட்டி,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. அகழாய்வு குழிகளில் வித்தியாசமான பழங்கால பொருட்கள் தொடர்ந்து கிடைத்து வருவதால், விஜயகரிசல்குளம் அகழாய்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

தற்போது, பழங்கால பெண்கள் அணிந்த ஆபரணம், பாசிமணிகள் மற்றும் சுடுமண்ணால் செய்த பந்து கிடைத்துள்ளன. இந்த ஆபரணத்தை கலைநயத்துடன் செய்துள்ளனர். குறிப்பாக விழாக்கள், முக்கிய நிகழ்வுகளின்போது இதனை அணிந்து இருக்கலாம். அகழாய்வில் கிடைத்த பாசிமணிகள் பச்சை, வெள்ளை நிறத்தில் உள்ளன. சுடுமண்ணால் ஆன பந்துகளை விவசாய நிலங்களில் விலங்குகளை விரட்டுவதற்கு பயன்படுத்தி இருக்கலாம்.

மேலும் விஜயகரிசல்குளம் அகழாய்வில் கருப்பு நிறத்தில் சிறிய அளவிலான மண்பானைகள் முழுமையாக தொடர்ந்து கிடைத்து வருவதாகவும், தொல்லியல் துைற இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார். மேலும் இதுவரை அங்கு நடந்த அகழாய்வில் 3,080 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.


Related Tags :
Next Story