ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளியில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா


ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளியில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா
x

ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளியில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடந்தது.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மிட்டப்பள்ளியில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவா் சின்னத்தாய் வரவேற்றார். ஒன்றியக்குழு தலைவர் உஷாராணி குமரேசன், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, ஒன்றிய செயலாளர்கள் எக்கூா் செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், ரஜினிசெல்வம், நகர செயலாளர் பாபு சிவக்குமார், நகர அவைத்தலைவர் தனிகை குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் சத்திய நாராயணமூர்த்தி, திட்டக்குழு உறுப்பினர்கள் கதிரவன், சங்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலீல், மணிகண்டன், பூபாலன், விஜயகுமார், இன்பசேகரன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் லயோலா ராஜசேகர், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தவமணி, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் உத்திரகுமார், பேரூராட்சி துணை தலைவர் கலைமகள் தீபக் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story