பள்ளத்தில் கவிழ்ந்த கார்


பள்ளத்தில் கவிழ்ந்த கார்
x
தினத்தந்தி 4 Jun 2023 6:45 PM GMT (Updated: 4 Jun 2023 6:46 PM GMT)

பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை அடுத்த பெருவண்டல் கிராமத்தின் அருகே திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென அந்த கார் சாலை ஓரம் இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாமக உயிர் தப்பினர். அதில் 2 பேருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து திருவாடானை போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story