மீனவர்கள் வலையில் அதிக எடை கொண்ட திருக்கை மீன்கள் சிக்கின


கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் அதிக எடை கொண்ட திருக்கை மீன்கள் சிக்கின. இந்த மீன்களுக்கு நல்லவிலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

கோடியக்கரையில் மீனவர்கள் வலையில் அதிக எடை கொண்ட திருக்கை மீன்கள் சிக்கின. இந்த மீன்களுக்கு நல்லவிலை கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.

மீன்பிடி சீசன்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலம் ஆகும். இந்த சீசன் காலத்தில் கோடியக்கரைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் வந்து தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோடியக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்று நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கரை திரும்பினர்.

அதிக அளவில் சிக்கிய திருக்கை மீன்கள்

கரை திரும்பிய மீனவர்களின் வலையில் அதிக அளவில் 40 கிலோ எடை கொண்ட கண்ணாமுழி திருக்கை, 60 கிலோ எடை கொண்ட புள்ளி திருக்கை மற்றும் மனதிருக்கை, முண்டன் திருக்கை, ஆடாதிருக்கை, புளிதிருக்கை, கொம்பு திருக்கை, அப்பள திருக்கை, தப்பு திருக்கை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட திருக்கை வகை மீன்கள் அதிக அளவு கிடைத்தது.

மேலும் சிங்கி இறால், நண்டு உள்ளிட்ட மீன்கள் அதிகளவு சிக்கியிருந்தன. திருக்கை மீன் ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை ஏலம் போனது. திருக்கை மீன்களை வெளியூர் வியாபாரிகள் விரும்பி வாங்கி சென்றனர்.

மீனவர்கள் மகிழ்ச்சி

அதிக எடை கொண்ட திருக்கை மீன்கள் அதிக அளவு கிடைத்ததாலும், இந்த மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததாலும் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோடியக்கரை மீனவர் நல சங்க முன்னாள் செயலாளர் சித்திரவேல் கூறுகையில், கோடிக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும். இந்த ஆண்டு சீசன் தொடங்கிய நேரத்தில் சுமாராகத்தான் மீன்கள் சிக்கின. ஆனால் சீசன் முடியும் நேரத்தில் தற்போது நாள் ஒன்றுக்கு 30 டன் வரை மீன்கள் சிக்குகின்றன.

கடந்த 10 நாட்களாக கடல்கொய், திருக்கை மீன்கள் வரத்து அதிக அளவில் உள்ளன. அதிக அளவில் மீன்கள் கிடைத்தாலும், நல்ல விலை கிடைப்பதாலும் சீசன் முடியும் நேரத்தில் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர் என்றார்.

1 More update

Next Story