அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள்


அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள்
x

வத்திராயிருப்பு பகுதியில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு பகுதியில் நெற்கதிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

நெல் சாகுபடி

வத்திராயிருப்பு, கான்சாபுரம், கூமாபட்டி, மகாராஜபுரம், தம்பிபட்டி, இலந்தைகுளம், கோட்டையூர் ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. தற்போது இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் விளைந்து இன்னும் ஒரு சில நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.

அறுவடைக்கு தயார்

ஆனால் இந்த பகுதியில் நெற்களம் இல்லாததால் வத்திராயிருப்பு-கிருஷ்ணன் கோவில் செல்லும் சாலையில் அறுவடை செய்யும் நெல்லை கொட்டி 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகு வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறோம். இதைபோல வத்திராயிருப்பில் இருந்து கூமாபட்டி செல்லும் சாலையிலும் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி உலர்த்திய பின்னரே வியாபாரிக்கு விற்பனை செய்து வருகிறோம்.

இதனால் இப்பகுதியில் அவ்வப்போது சிறுசிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அறுவடைக்கு முன்பு வத்திராயிருப்பு பகுதியில் நெற்களம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story